101. ஆலம்ப3னம் = தாங்கல், ஆதாரம், தூண்.
102. ஆலயம் = இடம், வீடு, இருப்பிடம், ஆசனம்.
103. ஆலஸ்யம் = சோம்பல், மந்தகதி.
104. ஆலாபனம் = விஸ்தாரமாகப் பேசுதல், பாடுதல்.
105. ஆலிங்க3னம் = கட்டிக்கொள்ளுதல், தழுவுதல்.
106. ஆலோகனம் = பார்வை, பார்ப்பது, காந்தி, புலவனின் புகழ்ச்சொல்.
107. ஆவரணம் = மறைத்தல், முடித்தல், வேலி, படுதா, திரை, கேடயம்.
108. ஆவர்த்தனம் = சுற்றுதல், திரும்புதல், கடைதல், உருக்குதல், மனனம் செய்தல், படித்தல், வட்டமான சலனம்.
109. ஆவாஹனம் = கூப்பிடுதல், அழைத்தல், தேவதைகளை வரவழைத்தல்.
110. ஆவிர்ப4வ: = உண்டாக்குதல், அவதரித்தல், அவதாரம் செய்தல்.
111. அசௌ’சம் = தீட்டு, தூய்மை இன்மை.
112. ஆச்’ரயம் = புகலிடம், இளைப்பாருமிடம், கொள்ளுமிடம், பெறுபவன், போஷிப்பவன்.
113. ஆச்’விநேயௌ = தேவர்களின் இரட்டை வைத்தியர்கள் அச்விநீ குமாரர்கள், நகுல சஹாதேவர்கள்.
114. ஆஸக்த = மிகுந்த பாசம் உடைய, நிச்சயிக்கப்பட்ட, ஈடுபாடு கொண்ட, நிரந்தரமான, தொடர்ந்த.
115. ஆஸங்க: = இணைதல், சேருதல், கூடுதல், உடன் இருத்தல், தொடர்பு, சம்பந்தம்.
116. ஆஹரணம் = அருகில் கொண்டு வருதல், பிடித்துக் கொள்ளல், எடுத்தல், பூர்த்தி செய்தல், வரதக்ஷிணை.
117. ஆஹுதி: = ஒரு தேவதைக் குறித்து யாகத்தின் போது அக்னியில் ஹோமகுண்டத்தில் அர்ப்பணம் செய்யப்படுவது.
118. ஆஹூதி: = கூப்பிடுதல், அழைத்தல்.
119. ஆஹோபுருஷிகா = அதிகமான அஹங்காரம், படை சம்பந்தப் பட்ட தற்பெருமை.
120. ஆக்ஷேப: = எறிதல், வசீகரித்தல், ஆக்ஷேபித்தல், தூஷித்தல், நிந்தித்தல், சந்தேஹம், சங்கேதம், யூகம், அனுமானம், மறுப்பு, எதிர்ப்பு.